வெள்ளி, 17 அக்டோபர், 2008

தாத்தாவோடு..

என் தாத்தாவின் வீட்டில் இருந்த போது இருந்த காலங்களை நெஞ்சை விட்டு நீக்க முடியாது.அந்த நாட்கள் இன்னும் பசுமை மாறாமல் நிழலாடி கொண்டிருக்கிறது..ஒவ்வொரு பள்ளி விடுமுறைக்கும் அம்மா அழைத்து போய் விடுவாள்..தம்பியோடும்,தங்கையோடும்,தேவையான துணிமணிகளோடும், எங்கள் பயணம் துவங்கி விடும்.தாத்தா ஊரில் அவ்வளவாக வசதிகள் கிடையாது என்று அம்மா சொல்வாள்.. ஆனாலும் எங்களுக்கு அங்கு செல்வதில் கொள்ளை பிரியம் உண்டு..நான் ஐந்தாவது படித்த போது நடந்த சம்பவம் என்று ஞாபகம்..அப்போது நடந்த அந்த சம்பவம் இன்னும் நெஞ்சை சுடுகிறது..

கருத்துகள் இல்லை: