என் தாத்தா கொல்லுவேலை பார்த்துக் கொண்டிருந்தார். தாத்தாவின் பட்டறை ஒரு ஆலமரத்தின் நிழலில் இருந்தது..அந்த ஆலமரம் படர்ந்து விரிந்து பிரமாண்டமாக குளக்கரையில் இருந்தது..பின்னாளில் அது வாய்க்காலாக மாறியது..தாத்தாவின் பட்டறைக்கும் தாத்தாவின் வீட்டிற்கும் ஒரே ஒரு சாலைதான் இருந்தது..அந்த சாலை பேருந்து செல்வதற்காக உருவாக்கப்பட்டதாகும்.. அதுவும் கரடு முரடான கற்களை கொட்டி இடையிடையே சிமெண்ட் தொட்டு கொண்டிருக்கும். அந்த ஊருக்கு பேருந்து ஒரு நாளைக்கு ஐந்து முறைதான் வரும் குறிப்பிட்ட நேரங்களில் ..அதனால் அந்த சமயங்களில் குழந்தைகளை சாலையில் விளையாட அனுமதிக்க மாட்டார்கள்..அந்த மாதிரி ஒரு சமயத்தில் தான் என் தங்கை தாத்தா பட்டறைக்கு போவதாக அடம்பிடித்தாள்..அதனால் நான் அவளை தாத்தா பட்டறையில் போய்
விட்டு விட்டு வந்தேன்.. நான் தாத்தா வீட்டின் எதிர் வீட்டில் இரண்டு மூன்று பேரோடு தாயம் ஆடிக் கொண்டிருந்தேன்.. ஒரு மணி நேரம் கடந்திருக்கும்..
சாப்பிடும் நேரம் அது..அதனால் தாத்தாவையும்,தங்கையையும் கூப்பிட பட்டறைக்கு கிளம்பி அந்த குறு சந்தின் முனையில் திரும்ப அழுகை சத்தம் கேட்டது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக